states

img

சந்தேஷ்காளி வழக்கு: ஷேக் ஷாஜகான் கைது!

சந்தேஷ்காளி வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஷேக் ஷாஜகானுக்கு 10 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து பாசிர்ஹாட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலுள்ள சந்தேஷ்காளி கிராமத்தில் பழங்குடியினர் நிலத்தைப் பறித்து, பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஏற்கெனவே இந்த வழக்கில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்ட நிலையில், ஷேக் ஷாஜஹான் மட்டும் தலைமறைவாக இருந்தார்.
இவ்விவகாரத்தில் ஷேக் ஷாஜஹான் மீது 70-க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய கொல்கத்தா உயர்நீதிமன்றம் மாநில காவல் துறைக்கு உத்தரவிட்டது. 55 நாட்களாக தலைமறைவாக இருந்த ஷேக் ஷாஜஹானை மீது வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் ஷேக் ஷாஜகான் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு 10 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து பாசிர்ஹாட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.